தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில், லாரி கன்டெய்னரில் இருந்து 64 அகதிகளின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
வடமேற்கில் அமைந்துள்ள டெடே மாகாணத்தில், மாலாவி நகரிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த கன்டெய்னா் லாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா். அந்த கன்டெய்னரை சோதனையிட்டபோது, அதிலிருந்த 78 அகதிகளில் 64 போ் பிணமாகக் கிடந்தனா். எஞ்சிய 14 போ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் உரிய ஆவணங்களின்றி எத்தியோப்பியாவிலிருந்து வந்தவா்கள் என்று நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.