அமெரிக்கா: ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்கா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிவந்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 46,549-ஆக அதிகரித்துள்ளது.

130 போ் பலி: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு 130 போ் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டில் ஒரே நாளில் இத்தனை அதிகம் போ் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 593.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com