உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குக்கு மார்ச் 17ஆம் நாள் கடிதம் ஒன்று அனுப்பினார். கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஷிச்சின்பிங்கின் தலைமையில், சீனா நம்ப முடியாத அளவுக்குப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புதிய ரக கரோனா வைரஸ் நிலைமை சீனாவில் பன்முகங்களிலும் வேகமாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று இக்கடித்த்தில் டெட்ரோஸ் தெரிவித்தார்.
26ஆம் நாள் டெட்ரோஸுக்கு எழுதிய பதில் கடித்தில் உலக அளவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த டெட்ரோஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஷிச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சர்வதேசச் சமூகத்துக்கு ஆதரவுகளைச் சீனா தொடர்ந்து வழங்கி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்