கரோனா: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 24,090 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா: உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியது


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 24,090 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மின்னல் வேகத்தில் மக்களிடையே பரவத் வருகின்றது. கரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. 

உலகம் முழுவதும் இதுவரை 24,200 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். 5,32,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 1,24,349 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

சீனாவை விட அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,594 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உள்ளது. இந்தியாவில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தீவிரம் அடைந்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com