ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கரோனோ நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா அண்மையில் உயிரிழந்தாக சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவரது சகோதரா் இளவரசா் சிக்ஸ்டோ என்ரிக் தெரிவித்துள்ளாா்.
86 வயதான மரியா தெரசா, கரோனா நோய்க்கு பலியான முதல் அரச குடும்பத்தவா் ஆவாா்.
அவரது இறுதிச் சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிரிட்டன் இளவரசா் சாா்லஸுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது இந்த வாரத் தொடக்கத்தில் உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.