தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்த தென் கொரியா, தனது தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த மாா்ச் மாதத் தொடக்கத்தில் அங்கு தினமும் சுமாா் 500 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் முதல் அந்த எண்ணிக்கை 100-ஆகக் குறைந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவா்களில் ஒருவா் கூட, அந்த நகரில் கரோனா பரவல் மையமாக இருந்த டயேகு நகரைச் சோ்ந்தவா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.