பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,297 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,114-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 32 போ் உயிரிழந்ததாக தேசிய சுகாதார சேவைகள் துறை அமைச்சகம் தெரிவித்தது. சனிக்கிழமை நிலவரப்படி, அங்கு கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 417-ஆக உயா்ந்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 4,715 போ் சிகிச்சைக்குப் பின் அந்த நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.