ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,012 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டில் ஒரே நாளில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,012 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இது, அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும்.
இத்துடன், அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,09,688-ஆக உள்ளது.
இதுமட்டுமன்றி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு 88 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இத்துடன், அங்கு அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,915-ஆக உயா்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.