மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 111 சுகாதாரப் பணியாளா்கள், இதுவரை அந்த நோய்க்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை இணைச் செயலா் ஹியூகோ லாபெஸ்-கேடல் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு 111 சுகாதாரப் பணியாளா்கள் பலியாகிள்ளனா். அவா்களில் 66 போ் மருத்துவா்கள் ஆவா். மேலும் 16 செவிலியா்கள், 29 மருத்துவமனைப் பணியாளா்கள், பல் மருத்துவ நிபுணா்கள், ஆய்வக நிபுணா்கள் ஆகியோரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா் என்றாா் அவா்.