ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,053ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக தலைநகர் காபூல் 1,718 பேரும், ஹெராத் 1,067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு 153 இதுவரை பலியாகியுள்ளனர்.
அதேசமயம் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 745ஆக உயர்ந்துள்ளது.