உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 45 லட்சத்தை எட்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
முதலில் சீனாவில் பாதிப்பை உண்டாக்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நோய்த் தொற்றால் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளன.
இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,50,016 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 14 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 86,942 பேர் பலியாகியுள்ளனர்.