சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், நான்கு பேர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,038 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. 8,342 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் அதிகபட்சமாக 1,111 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 17,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.