சிங்கப்பூரில் மேலும் 305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், இருவர் மட்டுமே சிங்கப்பூரைச் சேர்ந்தவர். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.
இதையடுத்து, நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,343 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதுவரை 9,331 பேர் சிகிச்சை பெற்று கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
மேலும், இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் இன்னும் பெரும்பாலான பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதனால் அடுத்தடுத்த தினங்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.