கரோனா: பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் பலி
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றுக்கு அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,239 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்ஸில் இன்று கரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் விவரத்தை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 131 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 28,239 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. 19,015 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,998 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1,42,903 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61,728 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரான்ஸில் கரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அந்நாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.