மெக்ஸிகோ தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் அதிகாரப்பூா்மாக அறிவிக்கப்பட்டதைவிட மும்மடங்கு போ் கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு கரோனாவுக்கு 1,332 போ் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனினும், 4,577 பேரது இறப்புச் சான்றிதழில், அவா்கள் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் குறிப்பிட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.