73-வது உலக சுகாதார மாநாட்டில் ஷி ஜின்பிங் உரை

கடந்த மே 18ஆம் தேதி நடைபெற்ற 73ஆவது உலகச் சுகாதார மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் காணொளி மூலம் கலந்துரையாடினார்.
73-வது உலக சுகாதார மாநாட்டில் ஷி ஜின்பிங் உரை

 

கடந்த மே 18ஆம் தேதி நடைபெற்ற 73ஆவது உலகச் சுகாதார மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் காணொளி மூலம் கலந்துரையாடினார்.

அதில் “ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புடன் நோய் பாதிப்பைச் சமாளித்து, மனித குலச் சுகாதாரத்தின் பொது சமூகத்தைக் கூட்டாக உருவாக்குதல்”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அதில், மக்கள் நலன் சார்ந்த நிலையில் உயிரை  முதன்மையாகக் கொண்டு, திறந்த மனப்பான்மையுடன், உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும், உலகின் பொது சுகாதார இலட்சியத்துக்கும் சீனா பொறுப்பேற்று வருகிறது என்று தெரிவித்தார்.

கொவைட்-19 நோய் பாதிப்பு பரவி வரும் நிலையில், முழு முயற்சியுடன் வைரஸ் தடுப்புப் பணியைச் செவ்வனே செய்வதோடு, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென்றும், உலகளவில் நோய் தடுப்பைத் தூண்டுவதற்காக சீனா, 5 நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஷிச்சின்பிங் கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com