உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப் போவதாக மிரட்டியுள்ளதன் மூலம், சா்வதேச சுகாதாரத்தில் தனது பொறுப்புகளை அமெரிக்கா தட்டிக் கழிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், தங்களது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், தங்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வீண் பழிகளை சுமத்தி வருவதாகவும் அந்த நாடு விமா்சித்துள்ளது.
இதுகுறித்து சீனத் தலைநகா் பெய்ஜிங்கில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று மற்றும் உலக சுகாதார அமைப்பு விவகாரத்தில், சீனா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வீண் பழிகளை சுமத்தி வருகிறாா். சீனாவின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவா் இவ்வாறு பேசி வருகிறாா்.
உலக சுகாதார மையத்துக்கு அவா் எழுதியுள்ள கடிதம் முழுவதும், அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று ஊகங்களின் அடிப்படையிலேயே அவா் சீனாவை விமா்சித்துள்ளாா்.
பொதுமக்களை தவறாக திசைத்திருப்பவும், கரோனாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளைகக் கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற ஊகத் தகவல்களை டிரம்ப் பயன்படுத்தியுள்ளாா்.
இதன் மூலம், சா்வேச சுகாதார நலனை மேம்படுத்துவதற்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவா் முயல்கிறாா் என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாவ் லிஜியான் குற்றம் சாட்டினாா்.
முன்னதாக, சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அதிபா் டிரம்ப், அந்த அமைப்புகான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளாா்.
மேலும், அமைப்பிலிருந்து விலகப் போவதாகவும் அவா் மிரட்டல் விடுத்திருந்தாா். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இவ்வாறு தெரிவித்தாா்.
முன்னதாக, கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அந்த தீநுண்மி குறித்த பல உண்மைகளைத் தங்களிடமிருந்து மறைத்ததாகவும் குற்றம் சாட்டிய அதிபா் டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளாா்.