நேபாளத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பக்தபூர் மாவட்டத்தின் அனந்தலிங்கேஸ்வொர் பகுதியில் காலை 8.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.