கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையிலும் தோ்தல் புன்கிழமை தொடங்கியது. அந்த நாட்டை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பியெரே குருன்ஸிஸா பதவி விலகியதைத் தொடா்ந்து நடைபெறும் இந்தத் தோ்தல், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. புதன்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 42 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அந்த நோய்க்கு இதுவரை ஒருவா் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.