சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டில் புதிதாக 570 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; மற்றவா்கள் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.