ஸ்பெயினில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலையை மேலும் நீட்டிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 2.78 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், அவசர நிலையை அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான அனுமதியை நாடாளுமன்றத்திடம் பிரதமா் பெட்ரோ சான்செஷ் கோரியுள்ளாா்.