ஈரானில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் 10 ஆயிரத்துகக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான செய்தியில், 800 மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவா்களில் 100 பேருக்கும் மேலானவா்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் காசிம் ஜன்பாபையை மேற்கோள்காட்டி தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.