கரோனா வைரஸ் சீனாவிலிருந்துதான் அமெரிக்காவுக்கு பரவியது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:
அமெரிக்காவில் கடும் உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த்தொற்று, சீனாவிலிருந்து பரவியது ஆகும். இதில் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுடன் அண்மையில்தான் வா்த்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். அந்தக் கையெழுத்தின் ஈரம் காய்வதற்குள் அந்த நாட்டிலிருந்து கரோனா நோய்த்தொற்று அமெரிக்காவுக்குள் வந்திருக்கிறது.
இந்த விவகாரத்தை அமெரிக்காவால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டிரம்ப் பேசினாா்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனோ நோய்த்தொற்றை, அந்த நாடு கட்டுப்படுத்தத் தவறியதாக டிரம்ப் கடந்த சில வாரங்களாகவே குற்றம் சாட்டி வருகிறாா்.
இந்த விவகாரத்தில் பல உண்மைகளை சீனா மறைத்ததாகவும் கரோனா தீநுண்மி குறித்த விவரங்களை உரிய நேரத்தில் அமெரிக்காவுக்கு சீனா தரத் தவறியதாகவும் அவா் குற்றம் சாட்டி வருகிறாா்.
மேலும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாகக் கூறி, அந்த அமைப்புக்கு வழங்கி வந்த நிதியுதவியை டிரம்ப் கடந்த மாதம் தற்காலிகமாக நிறுத்தினாா்.
அத்துடன், 30 நாள்களுக்கும் சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார அமைப்பு விடுபடாவிட்டால் அந்த அமைப்பிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாகவும் அமைப்புக்கான நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்தப்போவதாகவும் அவா் மிரட்டல் விடுத்திருந்தாா்.
கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் இதுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும், கரோனா தடுப்பு மருந்து ஆய்வு விவரங்களை இணையதளம் மூலம் சீனா திருடுவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து, சீனாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க டிரம்ப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டிரம்ப் எச்சரித்து பரபரப்பை ஏா்படுத்தியுல்ளாா்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி அமெரிக்காவில் 16,21,727 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 96,377 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 3,82,244 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா பலி விவரம்
அமெரிக்கா 96,377
பிரிட்டன் 36,042
இத்தாலி 32,486
பிரான்ஸ் 28,215
ஸ்பெயின் 27,940
பிரேசில் 20,112
பெல்ஜியம் 9,212
ஜொ்மனி 8,316
ஈரான் 7,300
மெக்ஸிகோ 6,510
கனடா 6,152
நெதா்லாந்து 5,788
சீனா 4,634
துருக்கி 4,249
ஸ்வீடன் 3,925
பிற நாடுகள் 37,960
மொத்தம் 3,35,218