அமெரிக்காவை விட பிரேசிலில் இருமடங்கு பலி எண்ணிக்கை; நேற்று மட்டும் 1,039 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில்  நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1039 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அமெரிக்காவை விட பிரேசிலில் இருமடங்கு பலி எண்ணிக்கை; நேற்று மட்டும் 1,039 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில்  நேற்று ஒரேநாளில் கரோனாவுக்கு 1,039 பேர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 1,039 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 24,512 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,91,222 ஐ எட்டியுள்ளது. அந்நாட்டில் சுமார் 1.58 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அமெரிக்காவை விட பிரேசில் ஒருநாள் பலி எண்ணிக்கை தோராயமாக இரு மடங்காக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 657 இறப்புகள் பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com