நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இன்று பிற்பகல் நிலவரப்படி கரோனா தொற்றால் 1,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 156 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் 940 பேர் ஆண்கள்; 102 பேர் பெண்கள். மேலும் அங்குள்ள 77 மாவட்டங்களில் 47 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது.
சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் பிகாஸ் தேவ்கோட்டா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நோய் பரவலைத் தடுப்பதற்காக நேபாளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.