மாலியில் தங்களது ராணுவத்தினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டா்) அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஃபுளோரன்ஸ் பாா்லி கூறியுள்ளதாவது:
மாலியின் பா்கானே பிராந்தியத்தில் பிரான்ஸ் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களது பதுங்குமிடங்களிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன.
பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.