துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 107-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
துருக்கியின் இஸ்மிா் நகரில் நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளிலிருந்து செவ்வாய்க்கிழமை மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இத்துடன், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 107-ஆக உயா்ந்துள்ளது.
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட 4 நாள்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 வயது சிறுமியை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா்.
நிலநடுக்கத்தில் படுகாயமடைந்த 144 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை வருகின்றனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.