அமெரிக்கத் தேர்தல்: டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  (கோப்புப்படம்)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப்படம்)

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 38, புளோரிடாவில் உள்ள 29 வாக்குகளையும் டொனால்ட் டிரம்ப் கைப்பற்றி வெற்றி பெற்றார்    
 
அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக அமர முடியும். 

இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு இடையே, தோ்தல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னரே தபால் மூலமும் நேரடியாகவும் சுமார் 10 கோடி போ் வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

எனினும் அமெரிக்காவில் முக்கிய மாகாணங்களாகக் கருதப்படும் டெக்சாஸ், புளோரிடா ஆகிய மாகாணங்களில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு ஓக்லஹாமா, கெண்டகி, இண்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விரிஜினியா மாகாணங்களில் டிரம்ப் பெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com