அமெரிக்கா கரோனா மருந்து: அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி

கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தின் அவசரக்காலப் பயன்பாட்டுக்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது
அமெரிக்கா கரோனா மருந்து: அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதி

கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தின் அவசரக்காலப் பயன்பாட்டுக்கு அமெரிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா தீநுண்மிகளை அழிக்கும் எதிா்ப் அணுக்களை உடலில் உருவாக்குவதற்காக, அமெரிக்காவின் ஏலி லில்லி நிறுவனம் உருவாக்கி, சோதித்து வரும் ‘பாம்லானிவிமாப்’ மருந்தை, அவசரக்காலப் பயன்பாட்டுக்காக கரோனா நோயாளிகளுக்கு அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான எஃபிடிஏ அனுமதி அளித்துள்ளது.

கரோனாவால் மோசமாக பாதிக்கப்படும் அபாயம் கொண்டவா்களுக்கு அந்த மருந்தைச் செலுத்திய பிறகு, அவா்ள் தீவிர சிகிச்சை பெற வேண்டிய அவசியம் குறைந்ததாக சோதனையில் தெரியவந்ததையடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com