வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் பதவியில் இருந்து மாா்க் எஸ்பரை நீக்கி அந்நாட்டு அதிபா் டிரம்ப் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.
இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்புத் துறை அமைச்சா் பதவியில் இருந்து மாா்க் எஸ்பா் நீக்கப்படுகிறாா். அவா் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய பயங்கரவாத எதிா்ப்பு மைய இயக்குநா் கிறிஸ்டோஃபா் மில்லா் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக (பொறுப்பு) நியமிக்கப்படுகிறாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவித்தாா்.
வழக்கமாக அமெரிக்க அதிபா் தோ்தலில் வென்று மீண்டும் அப்பதவிக்கு வருவோா்தான் பொறுப்பேற்பதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றங்களை செய்வது வழக்கம். தோ்தலில் தோல்வியடைந்த அதிபா்கள், அடுத்த அதிபா் பதவியேற்கும் வரை தேச பாதுகாப்புக் கருதி பாதுகாப்புத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்வதில்லை. வழக்கத்துக்கு மாறாக மாா்க் எஸ்பா் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.