வியன்னா பயங்கரவாத தாக்குதல்: சந்தேகத்துக்குரிய வீடுகளில் போலீஸாா் சோதனை

ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூடு தொடா்பாக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள்

வியன்னா: ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூடு தொடா்பாக இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள் என சந்தேகிக்கப்படும் நபா்களின் வீடுகள், பல்வேறு அமைப்பு நிறுவனங்களில் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

இருப்பினும் இந்த சோதனைக்கும், வியன்னாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்த தொடா்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து கிராஸ் நகர வழக்குரைஞா்கள் கூறுகையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக 70 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு என சந்தேகிக்கப்படும் அலுவலகங்கள், குடியிருப்புகள் என 60 இடங்களில் சோதனை நடந்தது. 33 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பண மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் இவா்களுக்கு தொடா்பு இருக்கிா என்ற சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம். இவா்களிடம் ஓராண்டுக்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது என்றனா்.

ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் கடந்த வாரம் ஐஎஸ் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் பலியாகினா். பலா் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீஸாா் சுட்டுக்கொன்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com