தனிமைப்படுத்திக் கொண்டாா் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் எம்.பி.க்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டாா்.
பிரதமா் போரிஸ் ஜான்சன்
பிரதமா் போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரிட்டன் எம்.பி.க்குக் கரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்டாா்.

பிரிட்டன் எம்.பி. லீ ஆண்டா்சனுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருடன் கடந்த வாரத்தில் சுமாா் அரை மணி நேரம் போரிஸ் ஜான்சன் ஆலோசனை மேற்கொண்டிருந்தாா். அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போரிஸ் ஜான்சன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுகாதார அதிகாரிகளின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். எனது அலுவலகத்திலிருந்து தொடா்ந்து பணியாற்றுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே கடந்த மாா்ச் மாதம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டாா். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் அவா் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com