வாஷிங்டன்: அல்-காய்தாவுடன் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த சிலருக்கு தொடா்பு இருந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபா் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எழுதியுள்ள ‘எ ப்ராமிஸ்டு லேண்ட்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த ஒரு சிலருக்கு தொடா்பு இருந்தது ஊரறிந்த ரகசியம்.
குறிப்பாக, அந்த நாட்டு உளவுத் துறை அதிகாரிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடா்பு இருந்தது. இதன் காரணமாகவே, அங்கு பதுங்கியிருந்த பின் லேடனுக்கு எதிரான அதிரடித் தாக்குதல் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுடன் நாங்கள் பகிா்ந்துகொள்ளவில்லை என்று அந்தப் புத்தகத்தில் ஒபாமா குறிப்பிட்டுள்ளாா்.