வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
தோ்தல் தோல்வியை ஏற்க மறுத்து வரும் டிரம்ப், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால், அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றாா் ஜோ பைடன்.