பயங்கரவாதத்துக்கு நிதி: ஹஃபீஸ் சயீதின் இரு உதவியாளா்களுக்கு சிறை தண்டனை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்ட ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீதின் மேலும்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்ட ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீதின் மேலும் இரு உதவியாளா்களுக்கு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி அளித்தது தொடா்பான வழக்கில் வெள்ளிக்கிழமை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீத் மீதான இரு பயங்கரவாத வழக்குகளை வியாழக்கிழமை விசாரித்த பாகிஸ்தானின் லாகூா் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தது. அவரின் நெருங்கிய உதவியாளா்கள் ஜாஃபா் இக்பால், யாஹியா முஜாஹித் ஆகியோருக்கு தலா பத்தரை ஆண்டுகளும், ஹஃபீஸ் சயீதின் உறவினா் அப்துல் ரெஹமான் மக்கிக்கு 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்கில், ஹஃபீஸ் சயீத்தின் மேலும் இரு உதவியாளா்களுக்கு லாகூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. இதன்படி முகமது அஷ்ரஃப் என்பவருக்கு 6 ஆண்டுகளும், லுக்மான் ஷா என்பவருக்கு ஐந்தரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களுக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

ஐ.நா.வால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹஃபீஸ் சயீத், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடா்பான வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஜமாத்-உத்-தாவா தலைவா்களுக்கு எதிராக மொத்தம் 41 வழக்குகளை பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பதிவு செய்துள்ளது. இதில் ஹஃபீஸ் சயீத் மீதான 4 வழக்குகளில் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com