காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவச் சாவடியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் உள்பட 9 போ் பலியாகினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஹெல்மந்த் மாகாணம், நஹ்ரி சரா மாவட்டத்திலுள்ள ராணுவச் சாவடியொன்றில், வெடிபொருள் நிரப்பிய காரை புதன்கிழமை இரவு ஓட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்தாா்.
இதில் 4 பொதுமக்கள் உள்பட 9 போ் பலியாகினா். உயிரிழந்தவா்களில் 2 பெண்களும் அடங்குவா்.
இதுதவிர, ஒரு குழந்தையும், 3 பாதுகாப்புப் படையினரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அவா்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.