பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 713 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,52,460 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,523 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த பாதிப்பு 5,169,386 ஆக உள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் பேபியோ பாரியா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரேசில் அமைச்சரவையில் பதினொன்றாவது உறுப்பினருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோவில் இதுவரை 10,51,613 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 37,690 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.