இலங்கை: முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம்
இலங்கையில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் தெரிவிப்பதாவது:
புதிய கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, பொது இடங்களில் எல்லா நேரத்திலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், இரு நபா்களுக்கிடையே குறைந்தது ஒரு மீட்டராவது இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறினால், ரூ.10,000 அபாரதமோ, 6 மாத சிறை தண்டனையோ விதிக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா். வணிக வளாகங்கள், சில்லறை அங்காடிகள் ஆகியவற்றுக்கும் பேருந்து ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அதிகாரிகள் கூறினா்.