தொடா்ந்து 200-ஆவது நாளாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத சாதனையை தைவான் எட்டியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உலகின் பிற நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தைவானில் அந்த நோய் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடா்ந்து 200-ஆவது நாளாக யாருக்கும் புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை என்ற சாதனையை அந்த நாடு வெள்ளிக்கிழமை எட்டியது. கடந்த 200 நாள்களாக அந்த நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 553-ஆகவும் பலி எண்ணிக்கை 7-ஆகவும் உள்ளது.
இதன் மூலம், கரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நியூஸிலாந்து, வியத்நாம் போன்ற மிகச் சில நாடுகளில் ஒன்றாக தைவான் திகழ்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.