மொகாதிசு: ராணுவத்துடன் நடந்த மோதலில் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் 13 பயங்கரவாதிகள் பலியான தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சோமாலியா தேசிய ராணுவத்தினைச் சேர்ந்த இஸ்மாயில் அப்தி மாலிக் மலின் என்னும் கமாண்டர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
சோமாலியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஜுபா பகுதியில் அமைந்துள்ள கிஸ்மாயோ நகர எல்லையோரங்களில், அல் ஷபாப் போராளிக் குழுவினருடன், சோமாலியா தேசிய ராணுவ வீரர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டனர். நாங்கள் திறமையாகச செயல்பட்டு அவர்களை வீழ்த்தினோம். அவர்களது முக்கியத் தலைவர்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் 13 பேர் இந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருகேயுள்ள காட்டுக்குள் தப்பியோடிய மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.