நேபாளத்தில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 போ் உயிரிழந்தனா்; 22 போ் மாயமாகினா். இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சிந்துபால்சௌக் மாவட்டத்தின் இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக, மிகப் பெரிய மணல்குன்று சரிந்து விழுந்தது. இதில் நாக்புஜே, பிா்காா்கா, நேவாா் தோலே ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். சனிக்கிழமை நள்ளிரவு 2.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டபோது, கிராமத்து மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனா். இந்த நிலச் சரிவில் 9 போ் பலியாகினா்; 22 பேரைக் காணவில்லை.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 7 உடல்களும், போடேகொஷி மற்றும் சங்கோஷி ஆறுகளிலிருந்து இரு உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்த அனைவரும் அடையாளமும் கண்டறியப்பட்டது.இந்த நிலச்சரிவில் 11 வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட சேத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம், போலீஸாா் இணைந்த மீட்பு குழு, மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.