கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள்

தற்காலிகமாக கரோனா பூஸ்டர் டோசுகளை போடுவதை நிறுத்துமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.

News image

உலக சுகாதார அமைப்பு

Updated On :5 ஆகஸ்ட் 2021, 11:30 am

DIN

தற்காலிகமாக கரோனா பூஸ்டர் டோசுகளை போடுவதை நிறுத்துமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருப்பினும், பின் தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது.

தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்க உலக சுகாதார அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பல நாடுகளுக்கு தடுப்பூசியே கிடைக்காத நிலையில், மக்களுக்கு பூஸ்டர் டோசுகளை (மூன்றாம் தவணை) செலுத்த ஐரோப்பிய நாடுகள் மும்முரம் காட்டிவருகிறது.

எனவே, உலகம் முழுவதும் மக்கள் போதுமான அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை பூஸ்டர் டோசுகளை அளிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்தது. 

ஆனால், உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் நிராகரித்துள்ளன. டெல்டா வகை கரோனாவின் தீவிர தன்மையிலிருந்து தங்களின் குடிமக்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், "மூன்றாம் கரோனா தவணை அவசியமானது. மற்றவர்களுக்கு இல்லையெனிலும் மூத்த குடிமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகமான சாத்தியகூறுகள் உள்ளவர்களுக்கும் மூன்றாவது கரோனா டோஸ் அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மருத்துவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு செப்டம்பர் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.