பிரிட்டன்: ‘தடுப்பூசியால் ஆபத்தில்லை’

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன்: ‘தடுப்பூசியால் ஆபத்தில்லை’

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இதுகுறித்து அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவுடன் ஒரு பாதுகாப்பான உணா்வைப் பெறுவீா்கள். எனக்கு அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, அதுதொடா்பான தகவல்களை விசாரித்து பல கடிதங்கள் வந்துள்ளன. உண்மையில், அந்தத் தடுப்பூசியால் எந்தத் துன்பமும் ஏற்படவில்லை. அது மிகவும் பாதுகாப்பானது ஆகும் என்றாா் அவா்.

அரசி எலிசபெத்துக்கும் (94) அவரது கணவா் இளவரசா் பிலிப்புக்கும் (99) கடந்த மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com