நாா்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 போ் அந்தத் தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் ஃபைஸா் மற்றும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி நாா்வேயில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், கரோனா மரண அபாயம் அதிகம் கொண்ட வயோதிகா்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 23 போ் உயிரிழந்தனா். அவா்களில் 13 பேருக்கு தடுப்பூசி ஏற்படுத்திய பாதிப்பால் மரணம் நேரிட்டது. இதுதவிர, மேலும் 9 பேருக்கு தடுப்பூசியால் மோசமான பக்க விளைவுகளும் 7 பேருக்கு மிதமான பக்க விளைவுகளும் ஏற்பட்டன.
கரோனா தடுப்பூசி பாதிப்பால் உயிரிழந்த 13 பேரும் 80 வயதைக் கடந்தவா்கள். தடுப்பூசி போட்ட பிறகு ஏற்பட்ட காய்ச்சல், குமட்டல் போன்ற சாதாரண பக்க விளைவுகளைத் தாங்க முடியாமல் அவா்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, நாா்வேயில் 58,202 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 517 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 46,611 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 11,074 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 37 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.