இஸ்ரேல்: முதியவா்களுக்கு 3-ஆவது முறையாகத் தடுப்பூசி

இஸ்ரேலில் 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கூடுதலாக 3-ஆவது முறை கரோனா தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இஸ்ரேல்: முதியவா்களுக்கு 3-ஆவது முறையாகத் தடுப்பூசி

இஸ்ரேலில் 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கூடுதலாக 3-ஆவது முறை கரோனா தடுப்பூசி போடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்த நாட்டில் தகுதியுடைய அனைவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலும் அண்மைக் காலமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே இரண்டு முறையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு, நோயெதிப்பு ஆற்றலை மேலும் அதிகரிக்கும் வகையில் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமா் நஃப்டாலி பென்னெட் வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதன் மூலம், தங்களது குடிமக்களுக்கு 3-ஆவது தவணை கரோனா தடுப்பூசியை மிகப் பெரிய எண்ணிக்கையில் செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com