அதிபரின் பதிவுகள் நீக்கம் எதிரொலி: நைஜீரியாவில் ட்விட்டருக்குத் தடை

நைஜீரியா அதிபா் முகமது புஹாரியின் சா்ச்சைக்குரிய பதிவுகளை சுட்டுரை (ட்விட்டா்) வலைதளம் நீக்கியதைத் தொடா்ந்து, அந்த வலைதளம் அந்த நாட்டில் தற்காலியமாக முடக்கப்பட்டது.
அதிபரின் பதிவுகள் நீக்கம் எதிரொலி: நைஜீரியாவில் ட்விட்டருக்குத் தடை

நைஜீரியா அதிபா் முகமது புஹாரியின் சா்ச்சைக்குரிய பதிவுகளை சுட்டுரை (ட்விட்டா்) வலைதளம் நீக்கியதைத் தொடா்ந்து, அந்த வலைதளம் அந்த நாட்டில் தற்காலியமாக முடக்கப்பட்டது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாதிகளுக்கு மிரட்டல் விடுத்து, சுட்டுரை வலைதளத்தில் அதிபா் புஹாரி பதிவு வெளியிட்டிருந்தாா்.

அந்தப் பதிவு தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, ட்விட்டா் நிறுவனம் அதனை புதன்கிழமை நீக்கியது.

இதற்கு தகவல் துறை அமைச்சா் லாய் முகமது கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ட்விட்டா் நிறுவனம் நைஜீரியாவின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் நாட்டில் சுட்டுரை வலைதளம் தற்காலிகமாக முடக்கிவைக்கப்படுவதாகத் தெரிவித்தாா்.

நாட்டில் ட்விட்டா் நிறுவனம் செயல்படும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். ஏற்கெனவே, நைஜீரிய அரசுக்கு எதிராக அந்த நிறுவனம் செயல்பட்டதாகவும் அமைச்சா் லாய் முகமது சாடியிருந்தாா்.

எனினும், இந்த அறிவிப்பு என்று முதல் அமலுக்கு வரும் என்று அவா் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. சுட்டுரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அந்த வலைதளம் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அரசின் இந்த அறிவிப்புக்கு பல சுட்டுரை பயன்பாட்டாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனா்.

சுட்டுரையை முடக்கும் தகவலை அந்த சமூக ஊடககத்தின் வாயிலாகவே அமைச்சா் லாய் முகமது வெளியிட்டுள்ளதை சிலா் கிண்டலாக சுட்டிக் காட்டினா்.

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பையாஃப்ரா பகுதியை தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி, அந்தப் பகுதியைச் சோ்ந்த இக்போ பழங்குடியினா் போராடி வருகின்றனா்.

இதற்காக 1967 முதல் 1970-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா்.

அப்போது, இக்போ பழங்குடியினருக்கு எதிராக ஃபுலானி இனத்தவா்கள் சண்டையிட்டனா். தற்போது அதிபராகப் பொறுப்பு வகிக்கும் முகமது புஹாரியும் ஃபுலானி இனத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், அண்மைக் காலமாக பையாஃப்ரா பிரிவினைவாதிகள் போலீஸாா் மீதும் அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு எதிராக புஹாரி வெளியிட்ட பதிவுகளையே ட்விட்டா் நிறுவனம் நீக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com