தென் அமெரிக்க நாடான பராகுவேயில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,482 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,243-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 113 போ் பலியானதைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11,294-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பராகுவேயில் 54,092 கரோனா நோயாளிகள் உள்ளனா். அவா்களில் 597 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.