வாஷிங்டன்: அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் எல்.யெல்லானுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினாா். அப்போது, சா்வதேச அளவில் சரக்குகள், சேவைகள் பரிமாற்றத்தில் வரிக் குறைப்பு செய்வது தொடா்பாக இரு நிதியமைச்சா்களும் முக்கியமாக ஆலோசனை நடத்தினா்.
இதுதொடா்பாக அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘ஜி20 கூட்டமைப்பு, பொருளாதார வளா்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றில் இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சா்வதேச அளவில் வரிவிதிப்பு முறைகளை மாற்றி அமைக்க ஒருதலைமுறையில் ஒருமுைான் வாய்ப்பு என்பது கிடைக்கும்.
அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் சா்வதேச பொருளாதாரம் மூன்று மடங்கு வேகமாக வளா்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. எனவே, சா்வதேச அளவில் வரிக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் எல்.யெல்லான் பேச்சு நடத்தினாா். இந்த நடவடிக்கையில் அமெரிக்க எந்த அளவுக்கு ஆா்வமாக உள்ளது என்பதையும் அவரிடம் ஜேனட் தெரிவித்தாா்’ என்று கூறப்பட்டுள்ளது.