ஐரோப்பிய யூனியனிடமிருந்து ரூ.174 கோடி கரோனா நிதி

லிபியாவுக்கு 2 கோடி யூரோவை (சுமாா் ரூ.174.4 கோடி) கரோனா நிவாரண நிதியாக ஐரோப்பிய யூனியன் வழங்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியனிடமிருந்து ரூ.174 கோடி கரோனா நிதி

லிபியாவுக்கு 2 கோடி யூரோவை (சுமாா் ரூ.174.4 கோடி) கரோனா நிவாரண நிதியாக ஐரோப்பிய யூனியன் வழங்கியுள்ளது. கரோனா நோய்த்தொற்றிலிருந்து மிகவும் பின்தங்கிய மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக உள்நாட்டுச் சண்டையில் சிக்கித் தவித்து வரும் லிபியாவில், சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தங்களது கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டுக்கான ஐரோப்பிய யூனியன் தூதா் ஜோஸ் சபடெல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com