ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணத் தலைநகா் அடிலெய்டில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் அளவுக்கு அதிகமான கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவ மையங்கள் மற்றும் பழைய கரோனா நோயாளிகள் வசித்த பகுதிகளிலிருந்து வெளியேறிய கழிவு நீரால் அதில் அதிக அளவு கரோனா தீநுண்மி இருந்திருக்கலாம் என்றனா்.
ஆஸ்திரேலியாவில் இதுவை 909 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.